தூத்துக்குடி: தூத்துக்குடியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள 28,000 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட டீசல் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டேங்கர் லாரி, சரக்கு வாகனத்தை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் பறிமுதல் செய்தது.